சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை, மீண்டும் தொடங்கியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து போராடி வருகிறது. நீட் விலக்கு கோரி இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் கோரி நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுக-கம்யூனிஸ்ட் ஓரணியில் நிற்கும் என்றும் கூறினார்.
