ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

 

ராமேஸ்வரம்: பலத்த காற்று வீசும் என்பதால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வரை சூறைக்காற்று வீசுக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீனவளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.

Related Stories: