×

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் எல்லாம் அதிமுகவை விமர்சிக்க கூடாது: முன்னாள் அமைச்சர் கடும் தாக்கு

 

சென்னை: நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் எல்லாம், அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என விமர்சிக்க கூடாது என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடுமையாக விமர்சித்தார்.
மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் பள்ளி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி, அதிமுக மாவட்ட செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசுகையில், ‘‘மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையை மூட வேண்டியது எம்எல்ஏவின் பணிதான். ஆனால் அதை செய்யாமல், மதுரவாயல் எம்எல்ஏ சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார். மக்கள் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், `ஜனநாயகன்’ படத்தை பார்க்க வைப்பதற்காக அமைச்சர்களுக்கும், பிரபலங்களுக்கும் ரோகிணி திரையரங்கில் இடம் ஒதுக்கீடு செய்வதில் மட்டுமே மதுரவாயல் எம்எல்ஏ கவனம் செலுத்துகிறார். அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என விமர்சிக்கும் தவெக தலைவர் விஜய், முதலில் வாயை திறந்து பேச வேண்டும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் அதிமுகவை விமர்சிக்க கூடாது’’ என்றார்.

 

Tags : AIADMK ,Former minister ,Chennai ,Gokula Indira ,Nelkundram ,Maduravoyal… ,
× RELATED நாட்றம்பள்ளி அருகே ஆபத்தான முறையில்...