×

இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாமல் தொழிலாளர் நலனில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்மாதிரியாக உள்ளது: அமைச்சர் முகமது பர்வேஸ் பேச்சு

 

சென்னை: இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாமல் தொழிலாளர் நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாக திகழும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக அமைச்சர் முகமது பர்வேஸ் கூறினார். சென்னையில் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில், ‘சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்’ குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கை நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பாகவும், மதிப்புடனும் நடத்தப்படுபவராகவும், முன்னேறும் வாய்ப்பை பெறுபவராகவும் இருக்கும் வகையில் நாம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் மட்டுமல்லாமல், தொழிலாளர் நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாக திகழும் மாநிலமாக தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். இன்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை உருவாக்கும் ஒவ்வொரு தொழிலாளரின் கண்ணியம் மற்றும் கடின உழைப்பின் குரலாக நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags : Tamil Nadu ,India ,Minister ,Mohammad Parvez ,Chennai ,Tamil Nadu Labor Education Institute ,International Labor Organization ,Social Dialogue ,
× RELATED ஓவியர் டிராட்ஸ்கி மருதுக்கு இயல்...