- அமைச்சர்
- வீண் பெருமை அரசாங்கம்
- ஏரல்
- கவின்
- அருமுகமங்கல
- ஆரல், தூத்துக்குடி மாவட்டம்
- வன்னியரசு
- தமித்செல்வி
- சந்திரசேகர்
ஏரல்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, அவரது வீட்டு முன்பு நேற்று நடந்தது. இதில் அமைச்சர் வன்னிஅரசு பங்கேற்று கவின் தாய் தமிழ்ச்செல்வி, தந்தை சந்திரசேகர் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். நினைவேந்தல் கூட்டத்தில் அமைச்சர் வன்னியரசு கவின் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தவெக பவானிசாகர் எம்எல்ஏவும், கவினின் பெரியம்மாவுமான தமிழ்ச்செல்வி மற்றும் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோரும் கவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் வன்னியரசு நிருபர்களிடம் கூறுகையில், கவின் கொலை தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதற்கான பணிகள் நீதிபதி தலைமையில் நடந்து வருகிறது. தற்போது அரசு அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கங்கள் கேட்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்த முழு அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் வழங்கப்படும்’ என்றார்.
