உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்: 2 இந்தியர்கள் மாயம்

லண்டன்: உக்ரைன் துறைமுகத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 இந்தியர்கள் மாயமாகி உள்ளனர். 2022ம் ஆண்டு உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியது முதல் கருங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பாதுகாப்பு சூழல் மிகவும் பதற்றமான நிலையில் உள்ளது. இந்த பகுதிகளில் இயங்கும் அல்லது பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது டிரோன், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்ஒரு பகுதியாக உக்ரைனின் முக்கிய கருங்கடல் துறைமுகங்களில் ஒன்றான ஒடெசா துறைமுகத்தில் ஏஜிஎன் ராக்னார் என்ற வணிக கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இதில் 4 இந்தியர்களும் இருந்துள்ளனர். இந்த கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து 2 இந்தியர்கள் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 2 இந்தியர்கள் மாயமாகி உள்ளனர்.

 

Related Stories: