×

நேர்மையான அரசியல்வாதிகள் வெல்வது கடினமாகிவிட்டது; இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா திடீர் அறிவிப்பு

மண்டியா : கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா மண்டியா மாவட்டம் கேஆர் பேட்டையில் நடந்த நிகழ்வில் நேற்று பங்கேற்றார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வருணா தொகுதிமக்கள் என்னிடம் மீண்டும் அங்கே போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2028ல் என்னுடைய வயது 82 ஆகிவிடும். வருணா தொகுதி மக்களின் ஆசையை தெரிவித்தாலும் இனி மேல் சட்ட பேரவை உள்ளிட்ட எந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். இதற்கு முன்பு தேர்தலை சந்தித்த போது தொகுதி மக்களே எனக்கு நிதியுதவி அளித்தனர். தொகுதி மக்கள் அளித்த பணத்தை பயன்படுத்தி தேர்தலில் செலவு செய்தேன்.

ஆனால், தற்போதைய அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு அதிக பணம் செலவிட வேண்டும். ஆனால், மக்களின் பிரச்னைக்காக போராட்டம் நடத்துவதில் இருந்து விலக மாட்டேன். மக்களின் நலன் சார்ந்த போராட்டங்கள், மக்களின் குரலாக செயல்படுவேன். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags : Former ,Karnataka ,Chief Minister Siddaramaiah ,Mandiya ,Chief Minister ,Siddaramaiah ,KR Pettai, Mandiya district ,Varuna ,
× RELATED மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா?: தேர்வு...