11 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சூரக்குடியை சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி பூச்சியம்மாள் (70). இவர்களின் மகன், மகள் ஆகியோர் குடும்பத்தினருடன் சென்னையில் வசிக்கின்றனர். இதனால் வயதான தம்பதி மட்டும் சூரக்குடியில் தனியாக உள்ளனர். நேற்று முன்தினம் மாலை பூச்சியம்மாள் அவரது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் மாயமானார்.

உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், நேற்று காலை சூரக்குடி மஞ்சுவிரட்டு திடல் அருகே முல்லைப் பெரியாறு நீட்டிப்பு கால்வாய்க்குள் பூச்சியம்மாள் கையில் காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகள் மாயமாகியிருந்தது. தகவலறிந்த எஸ்வி மங்கலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிந்த போலீசார், நகைக்காக பூச்சியம்மாள் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

Related Stories: