புதுக்கோட்டை: வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மூங்கில் அய்யனார் கோயில் திருவிழாவில் பட்டியலின சமூகத்தினருக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட விவகாரத்தில், இன்றைய தேரோட்ட திருவிழா ரத்து செய்தனர். உற்சவர் சிலையை அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தியதுடன், உற்சவர் மண்டபத்திற்கும் பூட்டு போடப்பட்டது. இதனை அடுத்து அம்மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பதற்றமான சூழலால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
