- பழனி
- அமைச்சர்
- ரமேஷ்
- திருச்சி
- இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்கள்
- கலெக்டர்
- பிரதிக் தயாள்
- திருச்சி மாவட்டம்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சி கலெக்டர் பிரதிக் தயாளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் ரமேஷ் அளித்த பேட்டி: பழநி கோயில் நிலப் பதிவு விவகாரத்தில் எனது மீதும், அரசின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.
பழநியில் ஒரு நிலம் உள்ளது, அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி பெறும் என இந்த வழக்கிற்குப் பிறகுதான் எனக்கே தெரியவந்தது. இந்த விவகாரத்தை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறியது நான்தான். தற்போது சிபிசிஐடி முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
