2008 பால் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலம்

 

சென்னிமலை, ஜூலை 24: சென்னிமலை முருகன் கோயிலில் நேற்று பாலாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி 2008 பால் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சென்னிமலை கைத்தறி மற்றும் சாய தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாலாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 59வது ஆண்டு நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் பால் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2008 பால் குடங்களுடன் பக்தர்கள் சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோயிலுக்கு சென்றனர்.

Related Stories: