சென்னை: பெங்களூருவில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வரவழைத்த சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராகுல் என்பவரை கைது செய்தனர். சென்னை எழும்பூர் தனியார் பார்சல் அலுவலகத்துக்கு கஞ்சா சாக்லேட்டுகளை எடுக்க வந்தபோது சிக்கினார். கஞ்சா சாக்லேட்டுகளை எடுக்க வந்த ராகுலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைதுசெய்தனர். இதே போல் சென்னை சூளையில் தர்மேந்தர் என்பவரிடம் 726 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்தனர்.
