×

மாணவர்கள் போராட்டம் காரணமாக டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!!

டெல்லி: டெல்லி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. நீட் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற சிஜேபி ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர். இதற்கு மத்தியில், ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் சிஜேபிக்கு நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், சிஜேபி இன்று வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் நடந்த போராட்டம் ஒரு டிரைலர்தான். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இன்னும் லட்சக்கணக்கானோர் டெல்லிக்கு வருவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள முக்கிய இடங்களுக்கு அருகே உள்ள லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ண ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி வீடு, மத்திய செயலகம், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தம், கான் சந்தை, ஜோர் பாக், சிவாஜி அரங்கம் ஆகிய 16 மெட்ரோ நிலையங்களை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Delhi ,Delhi Cockroach Janata Party ,Union Minister of Education ,Dharmendra ,NEET ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் கறுப்பு உடை...