×

ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

*மான் இறைச்சி பறிமுதல்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில் வீட்டில் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கியுடன் ஒருவரை வனத்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மான் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் குட்டை மலை கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, வனச்சரக அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் நேற்று பிள்ளையார் குட்டை கிராமத்தில் ஒவ்வொரு வீடாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் 2 நாட்டு துப்பாக்கிகள் மறைத்து வைத்து இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும் நடத்திய சோதனையில், அதே வீட்டில் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி, துப்பாக்கி குண்டுகளும் இருந்துள்ளது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன்(53), என்பவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு தனது வீட்டில் நாட்டு துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.பின்னர், 2 நாட்டு துப்பாக்கிகளையும் கைப்பற்றிய வனத்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர்.

மேலும், வீட்டில் இருந்த மான் இறைச்சி மற்றும் நாட்டு துப்பாக்கி குண்டுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாமிநாதனை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Odugathur ,Vellore district ,Odugathur… ,
× RELATED சேலத்தில் பெண்கள் பலரை ஆபாச படம்...