×

24 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 90,045 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38,573 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ேகாயில் உண்டியலில் ரூ.4.06 கோடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு 4.73 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 3.10 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் வெளியே சிலாதோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரமாகும். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 7மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati ,Tirumala ,Lord Shiva ,Tirupati Ezhumalaiyan Temple ,
× RELATED நாடாளுமன்றம் அருகே உச்சகட்ட பதற்றம் –...