நீட் உள்ளிட்ட 152 தேர்வுகளில் வினாத்தாள் கசிவு: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

திருமங்கலம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று அளித்த பேட்டி: பழநி கோயில் விவகாரத்தில் விசாரணை முடியும் வரையில் எந்த கருத்தும் தெரிவிப்பது சரியாக இருக்காது. ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசியபடி கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நடத்திய பல்வேறு போட்டித்தேர்வுகளில், இதுவரை 152 தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. தமிழகத்திற்கு நீட் தேர்வு பொருத்தமற்றது. தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசின் நிதி தேவை. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: