×

பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

திண்டுக்கல் : பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள வீட்டில் சிபிசிஐடி போலீசார் 8 பேர் சோதனை நடத்தினர். பழனி கோயிலின் ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார சன்னதி வீதியில் அமைத்துள்ள அருள்மீகு தண்டாயுதப்பாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மோசடி பத்தர பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பெயரில் பழனி அடிவாரம் போலீசார் குற்றவியல் சட்டத்தின்படி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட நான்கு பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தீவிரம் அடைந்ததை அடுத்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து சிபிசிஐடி போலீசார் கடந்த 2 நாட்களாக திண்டுக்கல் மற்றும் பழனியில் முகாமிட்டு தொடர் விசரனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் அறநிலை அலுவலர்கள், கோவில் நிர்வாகிகள், தாசில்தார் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் டிஎஸ்பி அஜய் தாகம் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.

Tags : CBCID ,Palani ,Justin Manikandan ,Dindigul ,CBCID police ,Char Registrar ,CPCID police ,Dindigul Linga Avenue ,Palani Temple ,
× RELATED தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன்...