×

உசிலம்பட்டி அருகே இரு தரப்பு மோதலில் காயமடைந்தவர் சாவு

உசிலம்பட்டி, ஜூலை 18: எழுமலையை அடுத்து எம்.கல்லுப்பட்டி அருகே டி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் ஆணைத்துரை(25). இவருடைய உறவினர் அழகுராஜா(46) என்பவரும் அருகருகே வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆணைத்துரை அழகு ராஜா வீட்டு அருகில் மாட்டை கட்டியுள்ளார். இதில், ஆணைத்துரை தரப்பினருக்கும் அழகுராஜா தரப்பினருக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.

இந்த மோதலில் இரு தலைப்பினரும் ஒருவரை ஒருவரை மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில், பலத்த காயமடைந்த அழகுராஜா சிகிச்சைக்காக மதுரை அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகுராஜ உயிரிழந்தார். இது குறித்து அழகுராஜா மாமனார் வெள்ளச்சாமியும், ஆணைத்துரையும் தனித்தனியே எம்.கல்லுப்பட்டி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆணைத்துரை தரப்பில் 11 பேர் மீதும், அழகுராஜா தரப்பில் 7 பேரும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Usilampatti ,Aanaathurai ,T. Paraipatti ,M. Kallupatti ,Egmulai ,Azhugaraja ,
× RELATED அரசினர் பாதுகாப்பு இடம், சிறார்...