×

ஆடி மாத விழாக்களும் அதன் மகத்துவங்களும்!

நன்றி குங்குமம் தோழி

ஆடி மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் விழா எடுத்து சிறப்பாக பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். பண்டிகைகளின் தொடக்கத்தினை ஆடி மாதத்தில் இருந்து தான் கணக்கிடுவார்கள்.

*ஆடி மாதத்தை ‘பீடை மாதம்’ என்று ஒதுக்குவது அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில் ‘பீட மாதம்’ என்றுதான் பெயர். அதாவது, மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே அதன் பொருள்.

*ஆடி மாதம் பிறந்தது முதல் மார்கழி வரை தட்சணாயன புண்ணிய காலம். புனித நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும்.

*ஆடி மாதம் செவ்வாய், வெள்ளியில் காமாட்சியை வணங்கினால் திருமணத் தடைகள் விலகி திருமணம் நடக்கும்.

*ஆடி செவ்வாயில் எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். மாதம் முழுதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். ஆடி வெள்ளியில் மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் சேரும்.

*ஆடி சுக்லபட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

*ஆடி ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை ஊரில் முருகனுக்கு ஆடி மாதம் கடைசி வெள்ளியில் கூடை கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதனை மலர் முழுக்கு என்று சொல்வார்கள்.

*ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

*ஆடி பெளர்ணமி நாளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்தால், மனம் குளிர்ந்து மழை பொழியச் செய்வார் என்பது ஐதீகம்.

தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.

 

Tags : Audi Month ,Audi ,Amman ,Peat ,
× RELATED பாரம்பரிய ஆடைகளை விற்பது என் சமூக கடமையாகப் பார்க்கிறேன்!