திருச்சி, ஜூலை 17: திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் தலைமையில், மாநகர கமிஷனர் வீர் பிரதாப்சிங், துணை மேயர் திவ்யா முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வகித்தனர். 57வது வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசுவதற்கு முன், திடீரென பாடத்துவங்கினார். ‘தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதான் என் கருத்து’ என முதல்வர் விஜய் ஒரு படத்தில் பாடுவார். ஆனால் நிஜ வாழ்வில் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. பெரம்பலுாரில் நடந்த எம்எல்ஏ அலுவலக திறப்பு விழாவில் அனைவரின் கைகளையும் பற்றி குலுக்கியவர், சுகாதார பணியாளர்களிடம் கை கொடுக்காமல் கடந்து சென்றார். இது அவரது தீண்டாமை போக்கை காட்டுகிறது. இதுதான் அவர் ‘உண்மை முகம்’ என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே ஒரு முதல்வர் தீண்டாமை போக்கை கடைபிடிப்பதை கண்டித்து, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது விசிக கவுன்சிலர் பிரபாகரன் மட்டும் முத்துச்செல்வத்தின் கருத்தை ஆமோதித்து, முதல்வர் செய்தது தவறுதான், கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதில் தவறில்லை என்றார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் மாமன்றத்துக்கு சம்பந்தம் இல்லாத கருத்துக்களை இங்கு பேசுவதற்கு அனுமதி இல்லை எனக்கூறி தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மேயர் அன்பழகன், நம் மாமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும். மன்றத்துக்கு தேவையற்றவற்றை இங்கு பேசவேண்டாம் எனக்கூறி முதல்வருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதில்லை எனக்கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
