போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கட்டப்பட்ட அந்த ரவுண்டானாவால் தற்போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தஞ்சை கொடிமரத்து மூளை பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் கும்பகோணம் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் அண்ணா சிலை வந்து புதிய பேருந்து நிலையம் சென்று வருகிறது. அவ்வாறு அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் பேருந்துகள் திரும்பும் போது இட நெருக்கடி ஏற்படுவதால் பேருந்தை திருப்ப ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
