நியூசிலாந்து: நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்தின் தென் தீவு முழுவதும் சக்திவாய்ந்த அதிர்வுகள் நிலவியது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் (NEMA) தகவல்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஃபியர்ட்லாந்து என்ற சுற்றுலா மையத்திற்கான நுழைவாயிலான டீ அனாவிலிருந்து சுமார் 40 கி.மீ (25 மைல்கள்) வடக்கே இருந்தது. காயங்கள் அல்லது சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
உள்ளூர் நேரப்படி இரவு 9.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை, அந்த அமைப்பு ஆரம்பத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என மதிப்பிட்டு, பின்னர் அதை 5.9 ஆகக் குறைத்தது. சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டபோதிலும், கடலோரப் பகுதிகளில் வலுவான மற்றும் அசாதாரணமான கணிக்க முடியாத கடல் அலைகளும் ஏற்படக்கூடும் என எதிர்பார்ப்பதாக தேசிய சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் (NEMA) தெரிவித்துள்ளது.
