×

அரசுபள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மாணவர்களுக்கு பேச்சு போட்டி

நீடாமங்கலம், ஜூலை 16: கொரடாச்சேரி அருகில் அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் – கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமை ஆசிரியர் ( பொ) சதிஸ்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்ஒருபகுதியாக பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள், குறிப்பேடுகள் மற்றும் எழுது பொருட்களை பள்ளி தூதுவர் சுபேத் செல்வம் வழங்கினார்.

மேலும் கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் முன்பிரேம், ஹரிபிரசாத், விஜய் மற்றும் ஆசிரியைகள்ஸ்ரீவித்யா, ராஜலெட்சுமி, வாசுகி, பிரியா, தமிழ் காவியா, கிருஷ்ணவேணிசாந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Tags : Education Development Day ,Needamangalam ,Koratacherry ,Kamaraj ,Ammaiyappan West Panchayat Union ,Middle ,School ,Koratacherry Union ,Tiruvarur District… ,
× RELATED அரசினர் பாதுகாப்பு இடம், சிறார்...