×

கோவிலூர் பெண்கள் பள்ளியில் பேச்சுப் போட்டி

முத்துப்பேட்டை, ஜூலை 16: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் வனிதா தலைமை வகித்து காமராஜர் பற்றி பேசினார். அதனை தொடர்ந்து மாணவிகளின் பேச்சு போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இதில் ஆசிரியை அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் இலக்கியா நன்றி கூறினார்.

 

Tags : Kovilur Girls' School ,Muthupettai ,Kamaraj ,Muthupettai, Thiruvarur ,Vanitha ,
× RELATED அரசினர் பாதுகாப்பு இடம், சிறார்...