உயிரிழந்த கப்பல் பொறியாளர் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை

துபாய்: கடந்த 12ம் தேதி ஒமன் கடற்கரைக்கு அப்பால் எம்வி ஜிஎப்எஸ் கேலக்ஸி என்ற வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கப்பலில் மூன்றாம் நிலை பொறியாளராக பணியாற்றிய புனேவை சேர்ந்த ஹேரம்ப் கர்மர்கர் உயிரிழந்தார். கப்பலில் இருந்த 10 பேர் மீட்கப்பட்டனர். தற்போது ஓமன் கடற்படையிடம் இந்திய பொறியாளர் ஹேரம்ப் உடல் உள்ளது.

அதனை பெற்று இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து துபாயில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், \”சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: