×

இந்திய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவில் அதிவேக பறக்கும் பஸ்கள்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

லக்னோ: லக்னோ – கான்பூர் இடையிலான அதிவிரைவுச் சாலையை திறந்து வைத்து கட்கரி பேசியதாவது: விரைவில் பறக்கும் பஸ்களை அறிமுகம் செய்ய உள்ளேன். கடலில் தரையிறங்கும் விமானத்தை ஏற்கனவே கொண்டு வந்துள்ளேன். அந்த விமானத்தில் பயணித்து கடலில் தரையிறங்கி உள்ளேன். எனது அமைச்சகத்தின் கீழ், மின்சாரத்தில் இயங்கும் அதிவிரைவு போக்குவரத்து அமைப்பை உருவாக்க உள்ளேன். இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக மக்கள் சென்றடைய முடியும்.

ஆனால், எவ்வளவு வேகத்தில் சென்றோம் என்பதை அவர்களால் உணர முடியாது. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட மின்சாரத்தால் இயங்கும் விரைவுப் பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதியாக பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

இதற்காக எனது அமைச்சகத்தின் கீழ், மின்சாரத்தால் இயங்கும் விரைவுப் பொதுப் போக்குவரத்து அமைப்பை நான் உருவாக்குவேன். இது மக்கள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு மிக விரைவாகப் பயணிக்க உதவும்; அவர்கள் எவ்வளவு வேகமாகச் சென்றடைந்தார்கள் என்பதைக்கூட உணராத அளவுக்குப் பயணம் மிக விரைவாக இருக்கும். எரிபொருள் இறக்குமதிக்கு நாடு ஆண்டுதோறும் சுமார் ரூ.22 லட்சம் கோடியைச் செலவிடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Union Minister ,Nitin Gadkari ,Lucknow ,Lucknow-Kanpur expressway ,Gadkari ,
× RELATED ஐஆர்சிடிசி இணையதளத்தின் புதிய...