மதுரை: பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தின் பத்திரப்பதிவு ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ‘கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய நீதிமன்றத்தை ஏமாற்றி உத்தரவு பெற்றுள்ளனர். விதிகளை மீறி பத்திரப்பதிவு அலுவலர்கள் எவ்வாறு இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்?. பத்திரப்பதிவு அலுவலர்கள் முறைகேடு செய்வது எப்படி?. முறைகேடாக நடந்த பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு செல்லாது. ரூ.100 கோடி நில மோசடியில் சார் பதிவாளரை மட்டும் சஸ்பெண்ட் செய்த அரசின் நடவடிக்கை போதுமானதல்ல’ என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
