×

தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் 17ம் தேதி செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் 17ம் தேதி செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் வரும் நாளை இரவு 10 மணி முதல், 17ம் தேதி இரவு 10 மணி வரை 9வது மண்டலத்திற்கு (தேனாம்பேட்டை) உட்பட்ட வடக்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், தெற்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், ஐஸ் ஹவுஸ் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் 13வது மண்டலத்திற்கு (அடையாறு) உட்பட்ட பட்டினப்பாக்கம் கழிவுநீர் உந்து நிலையம், ராஜா அண்ணாமலைபுரம் கழிவுநீர் உந்து நிலையம், பக்தவச்சலம் நகர் கழிவுநீர் உந்து நிலையம், அடையாறு கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது.

எனவே, தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அதன்படி, தேனாம்பேட்டை மண்டலம் பகுதி பொறியாளரை 8144930909 என்ற எண்ணிலும், அடையாறு மண்டலத்தில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு பகுதி பொறியாளரை 8144930913 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tenampet ,Adiyaru ,Drinking Water Board ,Chennai ,Chennai Drinking Water Board ,Denampet ,Adhiyaru ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக சரிந்தது