சென்னை: சென்னை சைதாப்பேட்டை சாரதி நகர், ஜோதி அம்மாள் நகரில் ஏற்பட்ட 5 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர் . தொடர்ச்சியாக இப்பகுதிகளில் மின்வெட்டு நடப்பதாகக் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மின்வெட்டு தொடர்பாக அழைத்தால், அழைப்பை ஊழியர்கள் துண்டிப்பதாக மக்கள் வேதனையடைந்துள்ளனர்
