×

டூவீலரில் ஆடு திருடிய 2 வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி, ஜூலை 14: திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதை ரோடு ரொக்க குத்தகை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (35) இவரது கிடா ஆடு நேற்று முன் தினம் மாலை வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.அப்போது, திருத்துறைப்பூண்டி நாடார் தெரு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (20), வீரா (17) ஆகிய 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் கிடாவை திருடி சென்றதாக தெரிகிறது.இதையடுத்து பாலமுருகன் புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags : Thiruthuraipoondi ,Balamurugan ,Vedai Road, Thiruthuraipoondi, Tiruvarur district ,
× RELATED அரசினர் பாதுகாப்பு இடம், சிறார்...