ஸ்டெர்லைட்டும், கரூர் சம்பவமும் ஒன்று அரசு வேலை வழங்கியதற்கு சப்போர்ட்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியால் சர்ச்சை

சத்தியமங்கலம்: ஸ்டெர்லைட்டும், கரூர் சம்பவமும் ஒன்று. அரசு வேலை வழங்கியதை ஒப்பிட்டு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்ளிடம் கூறியதாவது: ‘‘வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள் வேறு. எங்களுடன் இருக்கும் இளைஞர்கள் வேறு. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கியுள்ளதை கேள்வி கேட்கும் ஊடகங்கள் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்த போது ஏன் கேள்வி கேட்கவில்லை. திமுக, அதிமுக கூட்டணி சேர்ந்தால் என்ன தவறு என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக இரண்டும் வடதுருவம் தென் துருவமாக இருந்தது டிடிவி தினகரனுக்கு தெரியாதா. அதிமுகவின் கொள்கைகளை மாற்றி பேசுபவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஆளுநர் கண்டனத்துக்கு ‘கப்சிப்’
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்ததாதற்கு வருத்தம் தெரிவித்ததாக தமிழக ஆளுநர் கூறியது சம்பந்தமான நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெளிவாக கூறி இருக்கிறார்’ என்றார்.

Related Stories: