மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு நேரில் சென்றார். இந்த வருகையின் போது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விளையாட்டுத் தூதரக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற உள்நாட்டு டி20 தொடரான ‘பிக் பாஷ் லீக்’ (BBL) போட்டியின் தொடக்க ஆட்டம் இந்தியாவின் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டி ஒன்று இந்தியாவில் நடப்பது இதுவே முதல்முறையாகும். இந்த நிகழ்வின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
டிசம்பர் 12ம் தேதி பிற்பகல் 2:40 மணிக்கு, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் BBL போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ்-பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
