குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

 

குத்தாலம், ஜூலை 10: மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, விவசாயிகள் தற்போது பருத்தியை அறுவடை செய்து வருகின்றனர்.விவசாயிகளின் நலன்கருதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பருத்தி ஏலம் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்கீழ் இ-நாம் முறையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது.200-க்கு மேற்பட்ட விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்து விற்பனை கூடத்தில் அடுக்கி வைத்து ஏலம் நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்வார்கள்.

Related Stories: