புதுடெல்லி: ஒடிசா, மணிப்பூர், சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் நடந்து வரும் எஸ்ஐஆர் நடவடிக்கையில் 22 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாநிலங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு முன் மொத்தம் 3.68 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு, வாக்காளர் எண்ணிக்கை 3.46 கோடியாக குறைந்துள்ளது.
