மும்பை: பிள்ளைகள் பெற்றோரை கவனிக்காவிட்டால் எழுதித் தந்த சொத்தை திரும்ப பெறலாம் என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெற்றோரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சொத்து மாற்றம், நிபந்தனைகள் மீறப்பட்டால் சொத்து மாற்றத்தை தாரளமாக செல்லாததாக அறிவிக்கலாம் என்று மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
