×

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடத்தில் ஜீப் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்

 

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடத்தில் ஜீப் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தார்வாடிலிருந்து தர்மஸ்தலா மற்றும் சிக்கமகளூரு ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா செல்வதற்காக ஜீப்பில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் ஜீப் ஓட்டுநர் வாகனத்தை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் சாலையின் வலதுபுறமாக ஓட்டிச் சென்றுள்ளார். ​​அங்கோலாவிலிருந்து எல்லப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மீது அந்த ஜீப் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்

Tags : Uttara Kannada, Karnataka ,Karnataka ,Dharwad ,Dharmasthala ,Chikkamagaluru ,
× RELATED நிர்மலா சீதாராமன் பெயரை கூறி மருத்துவரிடம் ரூ.86 லட்சம் ‘அபேஸ்’