அரவக்குறிச்சி, ஜூலை 9: மாணவர்களின் திறனை செயல்திறனாக மாற்ற வேண்டும் என ஓய்வு பெற்ற கரூர் அரசு கல்லூரி முனைவர் மாரியம்மாள் வலியுறுத்தினர். கரூர் மாவட்டடம் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் நெளஷாத் தலைமையுரை வழங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முனைவர் மாரியம்மாள், ஓய்வுபெற்ற முதல்வர், அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கரூர், “Transforming Potential into Performance” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாணவர்கள் தங்களின் திறமைகளை உணர்ந்து, ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் இலக்குடன் செயல்பட்டால் கல்வியிலும் வாழ்க்கையிலும் சிறந்த சாதனைகளை படைக்க முடியும் என்று பேசினார்.
