×

பத்தாம்பட்டி பிரிவு பகுதியில் வேகத்தடை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

கருர், ஜூலை 9: கரூர் மாவட்டம் பத்தாம்பட்டி பிரிவு பகுதியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையோரம் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்திட வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து ஈசநத்தம், பாகநத்தம், அரவக்குறிச்சி, திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோடங்கிப்பட்டி, பத்தாம்பட்டி பகுதியின் வழியாக சென்று வருகிறது. இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாக வந்து செல்கிறது.

Tags : Pathampatti division ,Karur ,Eesanatham ,Pathampatti ,Bhaganatham ,Aravakurichi ,Dindigul… ,
× RELATED வழிகாட்டல் நிகழ்ச்சியில் தகவல்...