×

தென்காசி மாவட்டம், புளியறையில் உள்ள போக்குவரத்து துறை சோதனைச் சாவடி திடீர் மூடல்

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியறையில் உள்ள போக்குவரத்து துறை சோதனைச் சாவடி திடீரென மூடப்பட்டுள்ளது. போலீஸ் சோதனைச் சாவடியுடன் இணைந்து செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். புளியரை சோதனைச் சாவடியில் கேரள லாரிகளில் லஞ்சம் பெறுவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் எழுந்த நிலையில் தற்போது சோதனை சாவடியை மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Tenkasi District ,TENKASI ,DEPARTMENT ,PULIARA ,KERALA ,
× RELATED இங்கு அரசு வழக்கறிஞர் பதவி...