×

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரிடம் விசாரணை

பாடாலூர்: பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் காட்டுராஜா (55). இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தவறான அர்த்தத்தில் பேசுவதுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களுக்கு தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் இந்திரா ஆசிரியர் காட்டுராஜாவை அழைத்துச் சென்று, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags : Perambalur ,Patalur ,Katturaja ,Arumugam ,Attur ,Salem district ,Sirukanpur ,Alathur taluk ,
× RELATED தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய...