சென்னை: சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி மலரஞ்சலி செலுத்திய பின்னர், பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், “இரட்டைமலை சீனிவாசன் மிகச்சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் தன்மானமும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
தீண்டாமைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. அதே நேரத்தில், அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைத்து, ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையைக் கொண்டவராகவும் அவர் விளங்கினார். சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவருக்குரிய புகழஞ்சலியை நாடே இன்று மரியாதையுடன் செலுத்துகிறது,” என்று புகழாரம் சூட்டினார்.
