ரசிகர் மன்றத்துக்கு புதிய கொடி: தனுஷ் அறிமுகம்

சென்னை: நடிகரும், இயக்குனருமான தனுஷ் தனது ரசிகர் மன்றத்துக்கு புதிய கொடியை அறிமுகம் செய்திருப்பது, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் இருக்கும் அக்கொடியின் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனுஷ் கும்பிடுவது போன்ற ஒரு போட்டோ அதில் இடம்பெற்றுள்ளது. அதற்கு மேல், ‘எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல்தான் வாழ்க்கை’ என்ற தனுஷின் பிரபலமான வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய கொடி சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து, தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்றம் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலர், தங்களது காரில் அந்த புதிய கொடியை பொருத்தி வந்தது பல்வேறு கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

Related Stories: