டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்: அமைச்சர் விக்னேஷ் பேட்டி

 

சென்னை: டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 பிரச்னை தொடருகிறது. டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். ஊதிய உயர்வு வழங்குவதால் ரூ.110.74 கோடி கூடுதல் செலவு ஏற்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும். டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. அட்டை வழங்கப்படும்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயராது என்றும் மதுபாட்டில்கள் எம்ஆர்பி விலையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் பேட்டி அளித்துள்ளார். இனிமேல் கூடுதல் விலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால் பணிநீக்கம். டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.22,313ஆக உயரும். டாஸ்மாக் விற்பனையாளருக்கு ரூ.15,530லிருந்து ரூ.19,413ஆக ஊதியம் உயரும். டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.14,340லிருந்து ரூ.17, 925 உயரும்.

டாஸ்மாக் பார்கள் டெண்டர் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. PUBகளில் 21வயதுக்குட்பட்டோரை அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் PUB உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

 

 

Related Stories: