புதுடெல்லி: வாட்ஸ்அப்பில் மொபைல் எண்ணுக்கு பதிலாக புதிதாக யூசர்நேம் வசதி கொண்டு வர இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த வசதி, இணையவழி மோசடி, டிஜிட்டல் கைது, ஆள்மாறாட்ட முறைகேடு போன்றவற்றை அதிகரிக்கக் கூடும் என ஒன்றிய அரசு கவலை தெரிவித்து மெட்டா நிறுவனம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கம் தர கடந்த 1ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. திருப்திகரமான பதில் கிடைக்கும் வரை யூசர்நேம் வசதியை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் 3 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
