- தொழிலாளர் மாநிலக் குழு
- சிவகங்கை
- தமிழ்நாடு தெரு வியாபாரத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு
- ஏஐடியுசி
- மாநில தலைவர்
- சந்திரகுமார்
- மாவட்ட பொதுச் செயலாளர்
- ராஜா
- மாநில பொதுச் செயலாளர்
- ராதாகிருஷ்ணன்
சிவகங்கை, ஜூலை 6: சிவகங்கையில் ஏஐடியுசி சார்பில் தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சந்திரகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ராஜா வரவேற்றார். மாநில பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் கொடியேற்றி வைத்தார். மாநில செயலாளர் குளோப், பொருளாளர் முத்துக்குமரன் அறிக்கை சமர்ப்பித்தனர். இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சாத்தையா, ஏஐடியுசி நிர்வாகிகள் மீனாள்சேதுராமன், ராமச்சந்திரன், அன்சர்தீன், மருது, காளைலிங்கம், மணவழகன், கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து காண்டனர்.
தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அடையாள அட்டை, வியாபார சான்றிதழ் வழங்க வேண்டும். வணிகக்குழு தேர்தலை உடனே நடத்த வேண்டும். டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும். தெரு வியாபாரிகளை அரசு அலுவலர்கள், போலீசார் மிரட்டுவதை கைவிட வேண்டும். சட்டப்படி வியாபார கட்டணம் வசூல் செய்ய வேண்டும். வங்கி கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயம் நன்றி கூறினார்.
