×

திருத்தணியில் விடுமுறை நாளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

 

திருத்தணி, ஜூலை 6: திருத்தணியில் விடுமுறை நாளான நேற்று 4 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்னர் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இதனால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று திருத்தணி நகரில் பைபாஸ் சாலை, சித்தூர் சாலை, அரக்கோணம் சாலை, ஜெ.ஜெ.ரவி நகர், எம்.ஜி.ஆர். நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் மதியம் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் வீடுகளில் குழந்தைகள், பெண்கள், முதியோர் கடும் அவதி அடைந்தனர்.

Tags : Tiruttani ,Thaweka government ,Tamil Nadu ,
× RELATED வரத்து குறைவு காரணமாக காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு