காரைக்குடி, ஜூலை 6: காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான அறிமுக பயிற்சி முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வாக கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தியின் வழிகாட்டுதலின்படி ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடந்தது. தலைமைப் பயிற்சியாளருமான சோம நாகலிங்கம் மாணவர்களுக்கு மனசா..புத்தியா..என்ற தலைப்பில் ஆளுமை மேம்பாட்டு பயிற்சியளித்தார். கல்லூரியின் புவி அமைப்பியல் துறைத் தலைவர் முனைவர் உதய கணேசன் கல்லூரியின் நிர்வாகக் கட்டமைப்பு குறித்தும், பாடங்கள் குறித்தும் விளக்கினார்.
தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோமளவல்லி பாடத்திட்டம் குறித்தும், தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு முறை குறித்து கூறினார். வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா, தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் அனிதா மற்றும் புவி அமைப்பியல் துறை கவுரவ விரிவுரையாளர் முனைவர் தினேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
