- அறந்தாங்கி
- Keeramangalam
- காந்தி
- மெரேபனைகாடு சாலை
- கீரமங்கலம் நகர பஞ்சாயத்து
- புதுக்கோட்டை மாவட்டம்
- மெரெபனைக்காடு
அறந்தாங்கி, ஜூலை 6: கீரமங்கலத்தில் பட்டாசு தீ பட்டு பழைய இரும்புகடையில் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீரமங்கலம் பேரூராட்சி மேற்பனைகாடு சாலையில் காந்தி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புகடை உள்ளது. இந்த மேற்பணைகாடு சாலையில் திருமண மண்டபம் உள்ளது. இந்நிலையில் நேற்று மண்டபத்தில் சுப நிகழ்வுக்காக உறவினர்கள் மண்டபத்தின் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பட்டாசில் இருந்து நெருப்பு பழைய இருப்புகடைக்கு உள்ளே விழுந்தது.
இதில் பழைய இரும்புகடையில் தீபிடித்து புகை மூட்டம் கிளம்பியது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அதன்பிறகு கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை 1 மணி நேரம் போராடி அணைத்தனர். பின்னர் இரும்பு கடையில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
