×

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா நிறைவு

 

செங்கல்பட்டு, ஜூலை 9: இந்திய கூட்டுறவு அமைச்சகம் ஆரம்பித்து 5 ஆண்டுகள் நிறைவினை சிறப்பிக்கும் பொருட்டு கடந்த ஒரு‌ வாரமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இறுதி நாளான நேற்று நிறைவு விழா தென்மேல்பக்கம் நகர கூட்டுறவு சங்க வசந்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மலர்விழி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குனர் சிவமலர் ஆகியோர் தலைமையில் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் /சங்க உறுப்பினர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றன. பின்னர் சிறப்பாக பணியாற்றிய செயலாளர்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும் 39 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி கடன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சரக துணைப்பதிவாளர் கலையரசன் , துணைப்பதிவாளர் பயிற்சி கபிலவதனி, பிரதீப், செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் வேலு, கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் சங்க செயலாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Cooperative Week ,Chengalpattu district ,Chengalpattu ,Indian Ministry of Cooperatives ,
× RELATED தலைமறைவானவரை பிடிக்க சென்றபோது சிறப்பு எஸ்ஐ மீது சரமாரி தாக்குதல்