×

மாநகராட்சிகள், நகராட்சிகளில் வந்த புகார்களை தொடர்ந்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் ரூ.57.98 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடக்கும் முறைகேடுகளை தொடர்ந்து சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்பட மாநிலம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.57 லட்சத்து 98 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7,49,900 பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை என 25 மாநகராட்சிகள் இயங்கி வருகிறது. அதேபோல், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இயங்கி வருகின்றன. இந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்அடிப்படையில் நேற்று சென்னை உள்பட மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் குறிப்பாக சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் 10வது மண்டலத்தில் ரூ.1.30 லட்சம், திருவேற்காடு 6வது மண்டலத்தில் ரூ.38,590, தேனாம்பேட்டை 9வது மண்டலத்தில் ரூ.1,39,800, அண்ணாநகர் 8வது மண்டலத்தில் ரூ.23,050, ராயபுரம் 5வது மண்டலத்தில் ரூ.64,500, புழுதிவாக்கம் 14வது மண்டலத்தில் ரூ.23,500 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.37,710, திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் ரூ.67,000, வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அலுவலகத்தில் ரூ.8,610, கூகுள்பே மூலம் ரூ.20,000, கடலூர் மாவட்டம், மேலபட்டணப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.12,200 கூகுள்பே மேலும் ரூ.1,25,190, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சியில் ரூ.1,02,370, திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.55,000, தாம்பரம் மாநகராட்சியில் ரூ.88,410, கூகுள்பே மூலம் ரூ.1.16 லட்சம், திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.5,79,300, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சியில் ரூ.13,200, கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ரூ.1,67,000, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.12,200, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழி பேரூராட்சியில் ரூ.19,300, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.1,10,100, சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.30,100 பறிமுதல் செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் ரூ.51,000, ஓசூர் மாநகராட்சி வருவாய் பிரிவில் ரூ.1,13,550, திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் ரூ.51,900, திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.23,500, கூகுள் பே மூலம் ரூ.2,65,500, ராஜபாளையம், நகராட்சி திட்டமிடல் பிரிவில் ரூ.6000, ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.3.66 லட்சம், காரைக்குடி மாநகராட்சியில் ரூ.32,500, கூகுள் பே மூலம் 8.06 லட்சம், போடிநாயக்கனூர் நகராட்சியில் ரூ.91 ஆயிரம், கூகுள்பேயில் ரூ.1.03 லட்சம், திண்டுக்கல் மாவட்டம், தாடிகொம்பு நகராட்சியில் ரூ.55,900, கூகுள் பேயில் ரூ.1.29 லட்சம், தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7,49,900, தென்காசி நகராட்சியில் ரூ.43,160, கூகுள் பேயில் ரூ.52ஆயிரம், திருநெல்வேலி மாநகராட்சி பொறியாளர் பிரிவில் ரூ.96,600, கன்னியாகுமரி நகராட்சியில் ரூ.52,500 பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாநகராட்சி மண்டலம் 5ல் ரூ.20,500, கரூர் மாநகராட்சி திட்டமிடல் பிரிவில் ரூ.13,000, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.15,620, அரியலூர் நகராட்சியில் ரூ.14,000 கூகுள் பே மூலம் ரூ.4.34 லட்சம், புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.10,900, கூகுள்பேயில் ரூ.40,000, நாகப்பட்டிணம் நகராட்சியில் ரூ.1.03 லட்சம், திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.20,200, மயிலாடுதுறை நகராட்சியில் ரூ.53,740 என மொத்தம் 41 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.57 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.31,27,110, சந்தேகத்திற்கு இடமான முறையில் கூகுள்பே மூலம் ரூ.26,70,990 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 41 இடங்களில் நடந்த சோதனையில் அதிகப்பட்சமாக தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7,49,900 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆட்சியில் லஞ்சமே ெகாடுக்கப்படுவதில்லை. யாரும் லஞ்சமே வாங்குவதில்லை. வேலைகள் உடனே நடக்கிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் கதை விட்டு வருகின்றனர். ஆனால் தற்போது நடந்த சோதனையில் மட்டும் 41 இடங்களில் ரூ.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Tamil Nadu ,Anti-Corruption Department ,Nellai ,Pudukkottai ,Tiruvannamalai ,
× RELATED வரி பாக்கி செலுத்திய கடைக்கு பூட்டு...